பக்கம்:திருவருட் பயன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

.

வேண்டும் என்பது அறிஞரனவர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இங்கனம் எல்லார்க்கும் புலனாகும் இவ்வுலக நிகழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே, காணப்படாது உயிர்க்குயிராய் உடனின்றியக்கியருளும் முழுமுதற் பொருளாகிய கடவுளது உண்மையினை உணர்த்தக்கருதிய திருவள்ளுவர்,

   அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
   பகவன் முதற்றே யுலகு (1)

என அருளிச் செய்தார்."எழுத்துக்களெல்லாம் தம்மை உடனின்று செலுத்தும் அகரவொலியினைத் தமக்கு முதலாகவுடையன; அதுபோல, உலகமும் தன்னை உடனின்று இயக்கி நிற்கும் ஆதிபகவனாகிய இறைவனைத் தனக்கு முதலாக உடையது" என்பது இதன் பொருள். இங்கு 'உலகு' என்றது, உடம்பொடு காணப்படும் உயிர்த் தொகுதியினை. ஒர் வரையறையுடன் காணப்படும் இவ்வுலக நிகழ்ச்சியாகிய காரியத்தினைக்கொண்டு இதற்கு நிமித்த காரணமாகிய முதற் பொருள் ஒன்றுண்டு எனத் துணிய வேண்டியிருத்தலால், உலகு ஆதிபகவனே முதலாக உடையது, என உலகின்மேல் வைத்துக் கூறி னர். ஆயினும், தனக்கு முதல்வகை ஆதி பகவனைத் தேர்ந்துகொள்ளும் உணர்வுரிமையும் உடைமைத் தன்மையும் உலகிற்கு இன்மையால், 'உலகிற்கு முதல்வன் ஆதிபகவன்’ என்பதே இத் திருக்குறளின் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும் என விளக்கம் கூறுவர் பரிமேலழகர்.

ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

'எழுத்தெனப்படுப, அகரமுதல' (நூன்மரபு-1)

என்றும்,

‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்' (மொழிமரபு-13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/27&oldid=513308" இலிருந்து மீள்விக்கப்பட்டது