90 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை
"பழகினும் பார்ப்பாரைத் தீப்போல ஒழுக' வேண்டும் எனவும் உள்ள அடிகள் தமிழரிடையே அவர் காணப்பட்ட பங்கையும் காட்டுகின்றன. இவைபோன்று மேலும் பல உள்ளன. - -
இவற்றையெல்லாம் ஒன்றுகூட்டி ஒரு மீள் பார்வை யிட்டால்,
'அந்தணர் பார்ப்பனர்:
கடவுளரும் அந்தணர்-பார்ப்பனர்" என்னும் ஒரு வகைக்கருத்தும்,
'அந்தணர் துறவியர்
அந்தணர் எந்தக்குல இனத்துள்ளும்
அடங்காதோர்’ என்னும் மறுவகைக் கருத்தும்,
'பார்ப்பனர் போற்றத் தக்கவர்;
பார்ப்பனருள். இழிந்தவரும் புகடிக்கு
உரியவரும் இருந்தனர்' என்னும் இருவகைக் கருத்தும் ஒரே கால வட்டத்தில் தமிழ் மண்ணில் நிலவின என்றுதான் அறிய முடி கின்றது. . . . -
இவற்றை நோக்கும் எவரும் அத்தணர் பற்றி ஒரு குழப்பமான கருத்தையே காணவேண்டி நேரும். ஆம்; குழப்பமான கருத்துச் சூழ்நிலைதான் திருவள்ளுவர் காலத்தில் நிலவியது. - அந்தனர் பார்ப்பனர் அல்லர்
திருவள்ளுவர் இக்குழப்பத்தை-அந்தணர் யார் என்னும் குழப்பத்தை நீக்கி ஒரு தெளிவான கருத்தைப்
o
1. நல்லாதனார் திரி : 42-2