பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தொகுப்பு

அ. ஆய்வின் கடைப்பிடி

எடுத்துக்கொண்ட அளவிற்கு ஏற்ப இதுவரை 20 பகுத் தறிவு முனைகள் காணப்பட்டன. இவை போன்று பல பகுத்தறிவு முனைகள் காணப்பட வேண்டியவை திருக்குறளில் உள்ளன. -

இந்நூல் ஓர் ஆய்வுப் பொழிவின் எழுத்துருவ நூல். இந்த ஆய்வு, காய்தல் உவத்தல் அகற்றிய ஆய்வு: நடுநிலை ஆய்வு; நேர்மையான ஆய்வு. எடுத்த கருத்தை. இறுகப்பிடித்துக்கொண்டு வலிந்து எக்கருத்தும் கொள்ளப் படவில்லை.

திருவள்ளுவர் கொண்டு காட்டிய பகுத்தறிவிற்கு ஒவ்வாதவை சில அவர் நம்பிக்கையாகவே கொள்ளப் பட்டன.

சொற்பொழிவு எழுத்துருவ நூலாக ஆக்கப்படும்போது விளக்கத்திற்காகச் சேர்க்கைகள் இடம் பெறும். சான்றுச் செய்யுட்கள் இணைக்கப்படும். அச்செய்யுட்களின் நூல், செய்யுள் எண், அடியின் எண் ஆகியன குறிக்கப்படும். இவை இந்நூலில் இடம் பெற்றன.