பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருவள்ளுவரின் அணுகுமுறை

கருத்து , செய்தி

எந்த நூலாயினும் அதில் உள்ளவை அனைத்தும் நூலாசிரியரின் உட்கிடக்கையல்ல. அவர் எடுத்து மொழியப் புகுந்தமைக்குச் சான்றுகள் இருக்கும். எடுத்துக்காட் டுக்கள் இருக்கும். பிற செய்திகளும் இருக்கும். வேறுபட்ட கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றை யெல்லாம் ஒருங்கு வைத்து நோட்டமில்லால் நூலாசிரியர் தந்துள்ளவற்றைச் சுருச்கமாக இரண்டில் அடக்கலாம். ஒன்று கருத்து; மற்றொன்று செய்தி. செய்திகள் ஆசிரியர் கொண்ட கருத்தின் சார்புகள் அல்லது துணைகள். கருத், துக்கள் இரண்டு வகைகளாக அமையலாம். ஒன்று, நூல் நோக்கக் கருத்து. மற்றொன்று, நோக்கத்தின் விளக்கத் திண்மைக்கு உரமாகும் கருத்து. -

இங்கு முதலில் நூல் நோக்கத் திண்மைக்கு உரமாகும் கருத்தைக் குறித்துக் காட்டவேண்டும்.