பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 29 பலவற்யுைம் பல காலமாக மிகக் கருத்துடன் படித்து வந்துள்ளேன். அவ்வாறே அவ்வம்மதத் தலைவர்களின் போதனைகளையும் சாதனைகளையும் கற்றிருக்கிறேன். உலக மக்கள் யாவருக்கும் பொருந்தக் கூடியதும் வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடியதுமான நீதிகளை ஒருங்கே தெரிவிக்கும் நூல் திருக்குறள் ஒன்றே என்னும் முடிவுக்கு வரலானேன்; பேராச்சரியங் கொண்டேன். இத்தகைய ஒப்பற்ற நூல் தோன்றிய நாட்டில்-மா பெரும் மேதை தோன்றிய பரதகண்டத்தில் - நான் 醬 எடுத்துக் காட்டிய மூடப் பழக்க வழக்கங்கள் இன்றும் லைத்தும், கிளைத்தும், செழித்தும் இருக்கிறதே என்பதை நினைக்கும்போது அதைப் பார்க்கிலும் ஆச்சரியங் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். மூடப் பழக்க வழக்கங்களின் ஆணிவேரின் ஆற்றல் அத்தகையதுபோலும் என உணர்ந்து மெளனம் சாதிக்க வேண்டியவேைனன். so