பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 9 3 படியான நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருக்கின்றனவென்றும் இன்னொரு சாரார் கூறுகின்ருர்கள். திருவள்ளுவர் அறிவு ஆலயமோ - மக்கள் குழுவில் காணப்படும் குறைகள் அனைத்தையும் தீர் த் து எல்லோரும் இன்புற்றிருக்க வழி செய்யும். நம் முன்னேர்கள் பிரமாண்டமான ஆலயங்களைக் கட்டி வைத்திருக்கிருர்கள். அவர்கள் புகழ் இன்றும் நின்று நிலவு கிறது. ஆனல், அவர்கள் நோக்கத்திற்கு மாறுபட்ட நிலை இப்போது ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. எனவே ஆலய பக்தர்கள் சற்று தளர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இப்போது ஏற்படவிருக்கும் திருவள்ளுவர் அறிவு ஆலயமோ எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலை ஏற்படுத்தும் திட்டம் கொண்டது. அனைவரும் இவ்வறிவாலயம் கட்டும் பணியில் ஈடு படுவார்கள். அன்பர் பணி செய்து இன்பம் அடைவார்கள். ஆலயங்களுக்குக் கொடுக்கும் காணிக்கைகளை எல்லாம் திருவள்ளுவர் அறிவாலய நிதிக்குக் கொடுத்துப் பெரும் புண்ணி யம் தேடிக் கொள்வார்கள். அறிவாலய நிதியும் பத்திரிகை ஆசிரியர்கள் கடமையும் 'திருவள்ளுவர் அறிவு ஆலயம்' என்னும் இச்சிறு நூல் பற்றி மதிப்புரை எழுதுவதுடன், திருவள்ளுவர் அறிவாலய நிதி' திரட்டும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுப் பெரும் புகழ் அடை வார்கள்.