பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடக்கமுடைமை

இ-ள்:- செறிவு அறிந்து-அடக்கப்படுவனவும் அறிந்து, அறிவு அறிந்து- அறியப்படுவனவும் அறிந்து, ஆற்றின் அடங்க பெறின்-நெறியானே அடங்கப் பெறின், சீர்மை பயக்கும்-நன்மை பயக்கும்.

[செறிவு-அடக்கம்.] அடக்கப்படுவன மெய், வாய், கண், மூக்கு, செவி. அறியப்படுவன ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை.

இஃது, அடக்கம் நன்மையை நல்கு மென்றது. ௨௬௨.

ருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப் புடைத்து.

இ-ள்:- ஒருமையுள் ஐந்து ஆமைபோல் அடக்கல் ஆற்றின்-ஒரு பிறப்பிலே பொறிகள் ஐந்தினையும் ஆமைபோல அடக்கவல்லவனாயின், எழுமையும் ஏமாப்பு உடைத்து-(அஃது) அவனுக்கு எழுபிறப்பிலும் காவலாதலை யுடைத்து.

இஃது, அடக்கம் மறுபிறப்பிலும் நன்மையைப் பயக்கு மென்றது. ௨௬௩.

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

இ-ள்:- நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்-தனது நிலையில் கெடாதே அடங்கினவனது உயர்ச்சி, மலையினும் மாண பெரிது- மலையினும் மிகப் பெரிது.

நிலை-வர்ணாச்சிரம தருமம்.

இஃது, அடக்கம் உயர்வை நல்கு மென்றது. ௨௬௪.

யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குட் பட்டு,

௯௫