பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவற்கு.

இ-ள்:- கூற்றம் குதித்தலும் கைகூடும்-கூற்றத்தைத் தப்புதலும் கைகூடும், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவற்கு-தவத்தினாலாகிய வலியைக் கூடினாற்கு.

இது, தவம் செய்வார், (மார்க்கண்டன் தப்பினாற் போல) மரணத்தைத் தப்பலா மென்றது. ௨௭௭.

ன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணிற் றவத்தான் வரும்.

இ-ள்:- ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்-(இவ்விடத்துப்) பகைவரைத் தெறுதலும் நட்டோரை ஆக்குதலுமாகிய வலி, எண்ணின் தவத்தான் வரும்-ஆராயின் முன் செய்த தவத்தினாலே வரும்.

இது, பிறரை ஆக்குதலும் கெடுத்தலும் தம் தவத்தினாலே வரு மென்றது. ௨௭௮.

லர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

இ-ள்:- இலர் பலர் ஆகிய காரணம்-பொருளில்லாதார் (உலகத்துப்) பலராதற்குக் காரணம், நோற்பார் சிலர்-தவம் செய்வார் சிலர்; (உளர் சிலர் ஆகிய காரணம்) நோலா தவர் பலர்-பொருளுள்ளார் (உலகத்துச்) சிலராதற்குக் காரணம் தவம் செய்யாதார் பலர்.

[உளர் சிலராகிய காரணம் என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது.]

இது, பொருள் உண்டாதற்கும் தவம் காரண மென்றது. ௨௭௯.

௧00