பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இ-ள்:- ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்தில் அழுக்காறு இல்லாத இயல்பை, ஒழுக்கு ஆறாக கொள்க- தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க.

[ஒழுக்காறாக என்பது ஈறுகெட்டு நின்றது.]

இஃது, அழுக்காற்றைத் தவிர வேண்டு மென்றது. ௨௯௧.

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லை,யார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

இ-ள் :- யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாரிடத்தும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவானாயின், அஃது ஒப்பது விழுப்பேற்றின் இல்லை-அதனை ஒப்பது விழுமிய பேறுகளுள் பிறிதில்லை.

இஃது, அழுக்காறு செய்யாமை எல்லா நன்மைகளிலும் மிக்க தென்றது. ௨௯௨.

ழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.

. இ-ள் :- அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அழுக்காற்றினானே அறமல்லாதவற்தைச் செய்யார் (நல்லோர்), இழுக்காற்றின் ஏதம் படும் பாக்கு அறிந்து-(அவ்வறம்) தப்பின நெறியினால் குற்றம் வருதலை அறிந்து.

இஃறு, அழுக்காற்றால் பல குற்றங்கள் வருமென்றது. (அவை வருமாறு பின்னர்க் கூறப்படும்.) ௨௯௩.

வ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கக் கெடும்.

௧0௬