பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுக்காறாமை

இ-ள்:- அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும், செவ்வியான் கேடும்-செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும், நினைக்க கெடும்-விசாரிக்கக் கெடும்.

[அவ்வியம்-கோட்டம். செவ்வி-நேர்மை. விசாரிக்க-ஆராயின்.]

இஃது, அழுக்காறுடையார் செல்வம் கெடு மென்றது, "அழுக்கா றுடையான் கண் ஆக்கம்போன் றில்லை, ஒழுக்கம் இலான்கண் உயர்வு" என்றாதலின். ௨௯௪.

ழுக்காற் றகன்றாரும் இல்லை; அஃதில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரும் இல்.

[இ-ள்:- அழுக்காற்று அகன்றாரும் இல்லை-அழுக்காற்றினான் செல்வமுடைய ரானாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அழுக்காறில்லாதாராய்ச் செல்வத்தினின்று நீங்கினாரும் இல்லை.]

[உரையாசிரியர் இக்குறட்கு வேறாகப் பொருள் கூறாது "முன்பு சொன்னதே பொருள்" என்று கூறிச் சென்றார்.]

இஃது, அழுக்காறில்லாதார் பொருளுக்குக் கேடு உண்டாகா தென்றது. ௨௯௫.

றனாக்கம் வேண்டாதான் என்பான், பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

இ-ள்:- அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-(தனக்கு) அறனாகிய வாழ்வு வேண்டாதான் என்று சொல்லப்படுவான், பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்-பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாதே அழுக்காறு செய்வான்.

இஃது, அழுக்காறுடையார்க்குப் புண்ணியம் இல்லையாமென்று கூறிற்று. ௨௯௬.

௧0௭