பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

இ-ள்:- கொடுப்பது அழுக்கு அறுப்பான் சுற்றம்-(பிறனொருவன் மற்றொருவனுக்குக்) கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குவானது சுற்றம், உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும்-உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்.

[அழுக்கறுப்பான் என்பதனை அழுக்கு எனவும் அறுப்பான் எனவும் பிரித்து, அழுக்கு என்பதற்கு அழுக்காற்றினால் எனவும், அறுப்பான் என்பதற்கு விலக்குவான் எனவும் இவ்வுரையாசிரியர் உரைத்திருப்பது கவனித்தற் பாலது. அழுக்கறுத்தல்-என்பதனை ஒருசொல் நீர்மைத்தாகக் கொண்டு உரைத்துள்ளார் பரிமேலழகர். உடுப்பது-உடை, உண்பது-உணவு.]

அழுக்காறு நல்குரவு தருமென்று இது கூறிற்று. ௨௯௭.

வ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

இ-ள்:- அழுக்காறு உடையானை செய்யவள் அவ்வித்து-அழுக்காற்றினை யுடையானைத் திருமகள் அழுக்காறு செய்து, தன் தவ்வையை காட்டி விடும்-தன் தமக்கையாகிய மூதேவிக்குக் காட்டி (இவன்பால் செல்லென்று கூறி அவனினின்று) போம்.

[தவ்வையை என்பது வேற்றுமை மயக்கம்.]

இது, நல்குரவிற்குக் காரணம் கூறிற்று. ௨௯௮.

ழுக்கா றெனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுளி உய்த்து விடும்,

இ-ள்:- அழுக்காறு என ஒரு பாவி-அழுக்காறு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி, திரு செற்று தீயுளி உய்த்து விடும்-செல்வத்தையும் கெடுத்துத் தீக்கதியுள்ளும் கொண்டு விடும்.

௧0௭