பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெஃகாமை

[மற்று இன்பம்-சிற்றின்பமல்லாத இன்பம்-பேரின்பம். ஏகாரம் அசை, அறனல்லாத-மறச்செயல்கள்.]

இது, வீடு பெற விரும்புவோர் வெஃகுதல் செய்யா ரென்றது. ௩0௪.

டுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

இ-ள்:- படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்-(தமக்கு) உண்டாகும் பயனை விரும்பிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மை நாணுபவர்- நடுவன்மைக்கு நாணுபவர்.

[நாணுபவர்-அஞ்சுபவர். பழியொடுபடுவன-பழியை உண்டு பண்ணும் பாவச் செயல்கள்.]

இது, நடுவு நிலைமை வேண்டுபவர் வெஃகுதல் செய்யா ரென்றது. ௩0௫.

ருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான், பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

இ-ள்:- அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான்-அருளை விரும்பி அறநெறியிலே நின்றவனும், பொருள் வெஃகி பொல்லாத சூழ கெடும் - பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்.

[நின்றதும் என்பது உம்மை தொக்கு நின்றது. உம்மை உயர்வு சிறப்பும்மை. அஃது, அருளை விரும்பி அறநெறியிலே நின்றவன் வேறொன்றாலும் கெடான் என்பதனைச் சுட்டி நின்றது. சூழ்தல்-நினைத்தல்.]

இஃது, அருளுடையானும் வெஃகுதல் செய்யக் கெடுவ னென்றது. ௩0௬.

டுவின்றி நன்பொருள் வெஃகின், குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

௧௧௧