பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

[கூறுவனாயின் என்பது எச்சமாக வருவிக்கப்பட்டது.]

இது, பயனில கூறல் பிறரால் விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவா தென்றது. ௩௨௪.

சீர்மை சிறப்பொடு நீங்கும், பயனில
நீர்மை யுடையார் சொலின்.

இ-ள்:- பயன் இல நீர்மை உடையார் சொலின்-பயன் இல்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும்-(அவர்க் குண்டான) சீர்மையும் சிறப்பும் போம்.

[நீர்மை-நீரின் தன்மை-அருள். சீர்மை-நன்மை, சிறப்பு-மேன்மை. ஒடு என்பது இங்கு எண்ணுப்பொருளில் வந்தது.]

இது, நீர்மையுடையார் பயனில கூறுவராயின், அவருடைய எல்லா நன்மையும் போ மென்றது. ௩௨௫.

ல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

இ-ள்:- பயன் இல பல்லார் முனிய சொல்லுவான்-பயன் இல்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுமவன், எல்லாரும் எள்ளப்படும் -எல்லாரானும் இகழப்படுவன்.

இது, பயனில. கூறுவான் பிறரால் இகழப்படுவ னென்றது. ௩௨௬.

யனில்சொல் பாராட்டு வானை மகனெனல்;
மக்கட் பதடி எனல்.

இ-ள்:- பயன் இல் சொல் பாராட்டுவானை-பயன் இல்லாத சொல்லைக் கொண்டாடுவானை, மகன் எனல்-மகன் என்னாதொழிக; மக்கள் பதடி எனல்-மக்களில் பதர் என்று சொல்லுக.

[முதல் 'எனல்' அல்லீற்று எதிர்மறை வியங்கோள். இரண்டாம் 'எனல்' அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள்.]

௧௧௮