பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இ-ள்:- ஐ உணர்வு எய்தியக் கண்ணும்-மெய் முதலாகிய பொறிகள் ஐந்தினாலும் அறியப்படுவனவெல்லாம் அறிந்த இடத்தும், மெய்யுணர்வு இல்லாதவற்கு-உண்மையை அறியும் அறிவு இல்லாதாற்கு, பயம் இன்று- (அதனான்) ஒரு பயன் உண்டாகாது. [ஏகாரம் அசை.]

இஃது, எல்லா ஞானங்களையும் அடைந்திருப்பினும் மெய்ஞ்ஞானம் இல்லையேல் பயன் இல்லை யென்றது. ௩௫௧.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

இ-ள்:- பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளான்- பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே, மாணா பிறப்பு ஆம்-மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாகும்.

[அகத்துள் கொள்ளுதலே உணர்தலால், "பொருளென்று உணரும்" என்பதற்குப் "பொருளாகக் கொள்கின்ற" என்று உரைத்தனர்.]

இது, மெய்யுணருங்கால் மயக்கம் காண்பானாயின் பிறப்பு உண்டா மென்றது. ௩௫௨.

ப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இ-ள்:- எப்பொருள் எத்தன்மைத்தாயினும்-யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும், அப்பொருள் மெய் பொகுள் காண்பது அறிவு-அப் பொருளினுடைய உண்மையைத் தான் உண்மையாகக் காண்பது (யாதொன்று அஃது) அறிவாம்.

மெய்யென்பதூஉம் அறிவென்பதூஉம் ஒன்று. என்னை? எக்காலத்தும் ஒரு தன்மையாகி அழியாது நிற்றலின் மெய்யாயிற்று; எல்லாப் பொருளையும் காண்டலால் அறிவாயிற்று.

௧௨௮