பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்யுணர்தல்

[அப்பொருளினுடைய உண்மையைத்தான்-அப்பொருளினுடைய (காம ரூபங்களை விட்டு) உண்மைத்தன்மையையே. உண்மையாக-மெய்ப் பொருளாக.]

இது, பொருள்களுடைய உண்மையைக் காண்பது அறிவா மென்றது. ௩௫௩.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு.

இ-ள்:- பிறப்பு என்னும் பேதைமை நீங்க-பிறப்பாகிய அறியாமையினின்று நீங்க, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு-பிறவாமையாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.

பிறவாமை சிறந்ததாதலின் சிறப்பு என்னப்பட்டது.

இது, தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தான் சாவில்லாதவனாகவும் பிறப்பில்லாதவனாகவும் நிற்கிற நிலைமையைக் காணவேண்டு மென்றது. ௩௫௪.

ர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

இ-ள்:- உள்ளம் உள்ளது ஓர்த்து ஒருதலையாக உணரின்-உள்ளமானது உள்ள பொருளை ஆராய்ந்து ஒருதலையாக உணருமாயின், பேர்த்து பிறப்பு உள்ள வேண்டா-பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக.

[ஒருதலையாக-உண்மையாக. ஒருதலையாக என்பது ஈறு கெட்டு நின்றது.]

இது, மெய்யுணர்ந்தவர்கள் பிறப்பு உண்டென்று நினையா

௧௨௯

17