பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

தொழிக என்றது. ௩௫௫.

யத்தின் நீங்கித் துணிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

இ-ள்:- ஐயத்தின் நீங்கி துணிந்தார்க்கு-(மெய்ப்பொருளை) ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்களுக்கு, வையத்தின் வானம் நணியது உடைத்து-இவ்வுலகத்தைப் போல மேலுலகம் அணித்தரம் தன்மை யுடைத்து.

துணிந்த அறிவின் கண்ண தெல்லா உலகு மாதலின், அவ்வறி வுடையார்க்கு எல்லா உலகமும் ஒருங்கு தோற்றும். ஆதலால், வையத்தின் வானம் அணித்தர மென்றார்.

இது, மெய்ப்பொருளை யுணர்ந்தார் எவ்விடமும் அறிவ ரென்றது. ௩௫௬.

ருணீங்கி இன்பம் பயக்கும், மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

இ-ள்:- மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு-மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவை யுடையார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும்- அறியாமையாகிய இருள் நீங்கி முத்தியாகிய இன்பம் உண்டாகும்.

இது, மெய்யுணர்ந்தார்க்கு வினை விட்டு முத்தியின்பம் உண்டாகு மென்றது. ௩௫௭.

ற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார், தலைப்படுவர்
மற்றீண்டு வாரா தெறி.

௧௩0