பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வான் சிறப்பு

ரின் உழாஅர் உழவர், புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

இ-ள்:- உழவர் ஏரின் உழார் - உழவர் ஏரின் உழுதலைத் தவிர்வார், புயல் என்னும் வாரி வளம் குன்றியக்கால் - புயலாகிய வாரியினுடைய வளம் குறைந்த காலத்து. [யகரம் கெட்டது.]

இஃது, உழவர் இல்லை யென்றது. ௧௬.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும், தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்.

இ-ள்:- நெடும் கடலும் தன் நீர்மை குன்றும்-(நிலமேயன்றி) நெடிய கடலும் தனது தன்மை குறையும், தடிந்து எழிலி நல்காதாகிவிடின் - மின்னி மழையானது பெய்யாவிடின். [தான் - அசை.]

'தடித்து' என்பதற்குக் 'கூறுபடுத்து' என்று பொருளுரைப்பாரு முளர்.

இது, நீருள் வாழ்வனவும் படுவனவும் கெடுமென்றது. இவை நான்கினாலும் பொருட்கேடு கூறினார். பொருள் கெட இன்பம் கெடுமென்பதனால், இன்பக்கேடு கூறிற்றிலர். ௧௭.

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை.

இ-ள்:- எல்லாம் கெடுப்பதும் - (தான் பெய்யாது) எல்லாப் பொருள்களையும் கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்வாய் - அவை கெடப்பட்டார்க்குத் துணையாய், எல்லாம் ஆங்கே எடுப்பதும் மழை - (தான் பெய்து) பொருள் களெல்லாவற்றையும் அவ்விடத்தே உண்டாக்குவதும் மழை.

இஃது, இவ்விரண்டினையும் செய்யவற் றென்றது. ௧௮.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாவ தூஉம் மழை.

((nop))