பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீத்தார் பெருமை.

யாதானும் ஒரு பொய்யைச் சொல்லும் நூலும், தன்னை எல்லாரும் கொண்டாடுதற்காகத் துறந்தார் பெருமையை நன்குமதித்துக் கூறும், அதனானே, யாதும் சொல்லுகின்றே னென்றது. இது. ௨௧.

துறந்தார் பெருமை துணைக் கூறின்,வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

இ-ள்:- துறந்தார் பெருமை துணை கூறின் - (காமம் முதலாகத்) துறந்தாரது பெருமைக்கு அளவு கூறின், வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டால் அந்று - உலகத்துப் பிறந்திருந்தார் இத்துணையரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். [ஆல் கெட்டது.]

அவர் பெருமைக்கு எல்லை கூறுதல் அரிதாயினும், சில சொல்லப் புகாநின்றே னென்றது இது. ௨௨.

ரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்,
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.

இ-ள்:- உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்-அறிவாகிய தோட்டியானே பொறியாகிய ஒப்பற்ற யானை ஐந்தினையும் (புலன்களில் செல்லாமல்) மீட்பவன், வரன் என்னும் வைப்புக்கு ஓர் வித்து - மேலாகிய இடத்தே ஆதற்கு (இவ்விடத்தே இருப்பதாகிய) ஒரு வித்து.

அவர் பெருமை சொல்லுவார், முற்பட அவன் மக்கட்டன்மையனாய் இவ்வுலகின்கண் வாழ்பவன் அல்லன், தேவருள் ஒருவன் என்று கூறினார். ௨௩.

சுவைஒளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

இ-ள்:- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை - சுவை முதலாகக் கூறிய ஐந்து புலன்களின் வகையை, தெரிவான் கட்டே உலகு - ஆராய்வான் கண்ணதே உலகம்,

2