பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்.

எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே; அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காண அவற்றின் காரணமும் தோற்றும்.

[வேறொன்றாக - உலகமாக. அவ்வாறு - அவ்வைந்து புலன்களாக. அவற்றின் காரணம் - அவ்வைந்து புலன்களையும் உணரும் அறிவு.]

ஆதலால், உலகம் அறிவான் கண்ணதா மென்றார். ௨௪.

ந்தவித்தான் ஆற்றல், அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

இ-ள்:- ஐந்து அவித்தான் ஆற்றல் - நுகர்ச்சியாகிய ஐந்தனையும் துறந்தானது வலிக்கு, அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி-அகன்ற விசும்பி லுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே அமையும் சான்று,

இந்திரன் சான்றென்றது, இவ்வுலகின்கண் மிகத் தவம்செய்வார் உளரானால் அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்கு மாதலான்.

இது, தேவரினும் ஐந்தவித்தான் வலிய னென்றது. ௨௫.

ருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

இ-ள்:- இருமை வகை தெரிந்து - பிறப்பும் வீடும் என்னும் இரண்டினது கூறுபாட்டை ஆராய்ந்து, ஈண்டு அறம் பூண்டார் - இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது, பெருமை உலகில் பிறங்கிற்று - பெருமை உலகத்தில் மிக்கது. [மிக்கது - மேம்பட்டது.]

இஃது, எல்லாராலும் அவர் பெருமை போற்றப்படு மென்றது. ௨௬.

௧0