பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்

இ-ள்:- அறத்தான் வருவதே இன்பம் - அறத்தால் வருவது (யாதொன்று அது)வே இன்பமும் புகழுமாம். மற்று எல்லாம் புறத்த புகழும் இல் - அதனான்றி வருவனவெல்லாம் துன்பமாம் புகழும் இலவாம்.

எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வரு மென்றது. ௩௫.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின், அஃதுதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்,

இ-ள்:- வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - ஒரு நாள் இடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின், அஃது - அச்செயல், ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - ஒருவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை அடைப்பதோர் கல்லாம்.

இது, வீட்டைத் தரு மென்றது. ௩௬.

செயற்பால தோரும் அறனே; ஒருவற்
குயற்பால தோரும் பழி.

இ-ள்:- ஒருவற்கு செயல் பாலது அறனே - ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே; உயல் பாலது பழி - தப்பும் பகுதியது பழியே.

மேல், அறம் செய்யப் பிறப்பது மென்றார், அதனோடு பாவம் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார். ௩௭.

றத்தினூங் காக்கமும் இல்லை; அதனை
மறத்தலினூங் கில்லையாம் கேடு.

இ-ள்:- அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - (ஒருவனுக்கு) அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடும் இல்லை. [ஆம் என்பது அசை.]

இது, அறம் செய்யாக்கால் கேடு வரு மென்று கூறிற்று. ௩௮

௧௪