பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறன் வலியுறுத்தல்

ழுக்கா றவாவெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

இ-ள்:- அழுக்காறு - மனக்கோட்டமும், அவா - ஆசையும், வெகுளி வெகுளியும், இன்னாச்சொல் - கடுஞ்சொல்லும், நான்கும் இழுக்கா - என்னும் நான்கினையும் ஒழித்து, இயன்றது அறம் - நடந்த (அது யாதொன்று) அஃது அறமென்று சொல்லப்படும்.

பின்னர்ச் செய்யலாகா தென்று இந் நூல் கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்றும், அறம் எத்தன்மைத்தென்றும் இது கூறிற்று. ௩௯.

னத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்;
ஆகுல நீர பிற.

இ-ள்:- மனத்துக்கண் மாசிலனாதல் - (ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமிலனாதலே, அனைத்து அறன்-எல்லா அறமுமாம். பிற ஆகுல நீர - (அதில் குற்றமுண்டாயின்) மேல் செய்வனவெல்லாம் ஆரவார நீர்மையன.

பிறர் அறியவேண்டிச் செய்தானா மென்றாயிற்று. மேல் நாலு பொருளைக் கடிய வேண்டு மென்றார். அவை நான்கும் மனமொன்றும் தூயதாகப் போமென்று அதன்பின் இதனைக் கூறினார். ௪0

௧௫