பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்வாழ்க்கை

பயன் வேறு வேண்டா; தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சிதானே அமையும்.

பழியொடு வாராத உணவை நுகர ஏற்பார்மாட்டு அன்பு செய்ய வேண்டு மென்பதூஉம், தான் சீலனாய்க் கொடுக்கவேண்டுமென்பதூஉம் இது கூறிற்று, ௪௫.

றத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்?

இ-ள்:- இல்வாழ்க்கை அறத்து ஆற்றின் ஆற்றின் - இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்த வல்லவானாயின், புறத்து ஆற்றின் போய் பெறுவது எவன் - புறநெறியாகிய தவத்தில் போய்ப் பெறுவது யாதோ?

மேல் சீலனாய்க் கொடுக்கவேண்டு மென்றவர், ஈண்டு அவ்வாறு செய்யின் அதுதானே தவப்பயனையும் தரு மென்றார். ௪௬.

ற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை,
நோற்றலின் நோன்மை உடைத்து.

இ-ள்:- ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின்பால் ஒழுகும் இல்வாழ்க்கை, நோற்றலின் நோன்மை உடைத்து - தவம் செய்தலினும் வலி உடைத்து,

ஒழுகப்பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல்.

இது, தவத்தினும் இல்வாழ்க்கை வலியுடைத் தென்றது, ௪௭.

யல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்,
முயல்வாரு ளெல்லாம் தலை.

இ-ள்:- இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - நெறியினாலே இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான், முயல்வாருள் எல்லாம் தலை - முயல்வா ரெல்லாரினும் தலையாவான்.

௧௯