பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

முயல்தல் - பொருட்கு முயல்தல். [பொருள் - மெய்ப்பொருள்.]

இது, மெய்ப்பொருளை அடைய முயல்வாருள் இல்வாழ்வான் தலையானவ னென்றது. ௪௮.

வையத்துள், வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இ-ள்:- வாழ்வாங்கு வாழ்பவன் - இல்வாழ்க்கை வாழும் படியிலே வாழுமவன், வையத்துள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.

இஃது, இல்வாழ்வான் எல்லோராலும் நன்குமதிக்கப்படுவன் என்றது. ௪௯.

றனெனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று,

இ-ள்:- அறன் எனப்பட்டது. இல்வாழ்க்கையே - அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே : அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - அதுவும் பிறன் ஒருவனால் பழிக்கப்ப்டுவ தொன்றை உடைத்தன்றாயின் நன்றாம்.

பழிக்கப்படுவ தென்றது இழிகுணத்தாளாகிய மனையாளை.

இனி வாழ்க்கைத் துணைநலம் கூறுகின்ற ராதலின், இஃது ஈண்டுக் கூறப்பட்டது. ௫0.

௬-வது.-வாழ்க்கைத் துணை நலம்.

வாழ்க்கைத் துணைநல மாவது, இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனையாளது பெண்மையிலட்சணம். இல்வாழ்க்கைக்கு மனையாள் இன்றியமையாத துணையாதலான், இஃது அதன்பின் கூறப்பட்டது.

னைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை,

௨0