பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைத் துணைநலம்

இ-ள்:- தன் காத்து தன் கொண்டான் பேணி - தன்னையும் காத்துத் தன்னைக்கொண்ட கணவனையும் பேணி, தகை சான்ற சொல் காத்து சோர்வு இலாள் பெண் - நன்மை அமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள். [சோர்வின்மை - இம்மூன்றிலும் தளரவில்லை.]

இது, பெண்களிற் சிறந்தாளது இலக்கணம் கூறிற்று. ௫௭.

தெய்வம் தொழாஅள், கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இ-ள்:- தெய்வம் தொழாள் - தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், கொழுநன் தொழுது எழுவாள் - தெய்வமும் தன் கணவனென்றே கருதி அவனை நாள்தோறும் தொழுது எழுமவள், பெய் என மழை பெய்யும் = பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

எழுதல் - உறங்கி யெழுதல். [தொழுது எழுவாள் - தொழுதுகொண்டே எழுகின்றவள்.]

இது, கணவனைக் கனவிலும் நனவிலும் தெய்வம் எனத் தொழுவாள் ஆணைக்குப் பூதங்களும் கீழ்ப்படியு மென்றது. ௫௮.

பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

இ-ள்:- பெண்டிர் பெற்றார் பெறின் - பெண்டிரானவர் (தம்மை மனைவியாராகப்) பெற்றவரையே (தமக்குத் தலைவராகப்) பெறின், புத்தேளிர் வாழும் பெரும் சிறப்பு உலகு பெறுவர் - தேவர் வாழும் பெருஞ் சிறப்பினை யுடைய உலகத்தைப் பெறுவர். [தலைவன் - கடவுள்.]

இது, கணவனைத் தெய்வமாகக் கொண்டவள் அடையும் பயன் கூறிற்று. ௫௯..

௨௩