பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- என்பு இலதனை வெயில்போல காயும் - என்பு இல்லாத சீவனை வெயில் சுடுமாறு போல் சுடும், அன்பு இலதனை அறம் - அன்பு இல்லாத உயிரினை அறம். [ஏகாரம் அசை, அறம் - அறக்கடவுள். சீவனை - பிராணியை. உயிரினை - மனிதனை.]

இஃது, அன்பு இல்லாதார் துன்பமுறுவர் என்றது. ௭௧.

ன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பார்க்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

இ-ள்:- அகத்து அன்பு இல்லாத உயிர்வாழ்க்கை - தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை, வன் பார்க்கண் வற்றல் மரம் தளிர்த்தால் அற்று - வன்பாரிடத்து (நடப்பட்ட) உலர்ந்த மரங்கள் தளிர்த்தால் போலும். (தளிர்த்தற்குக் காரணம் இன்மையால் தளிரா தென்றவாறு.)

[இல்லாத என்பது ஈறுகெட்டு நின்றது. ஆல் என்பது கெட்டது. வன்பார் - பாலைநிலம்.]

இஃது, அன்பு இல்லாதார் அழிவ ரென்றது. ௭௨.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும், யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு?

இ-ள்:- யாக்கை அகத்து உறுப்பு அன்பு இல்லவர்க்கு - உடம்பிற்கு அகத்து உறுப்பாகிய அன்பு இல்லார்க்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - புறத்து உறுப்புக்க ளெல்லாம் யாதினைச் செய்யும்? (ஒருபயனையும் செய்யா.) [புறத்துறுப்பு - மெய், வாய், கண், மூக்கு, செவி, கை, கால் முதலியன. இல்லவர்க்கு என்பது லகர ஒற்றுக் கெட்டு நின்றது.]

இஃது, அன்பில்லாதவர் அங்கவீனரை ஒப்பர் என்றது. ௭௩.

ன்பின் வழிய துயிர்நிலை : அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு.

௨௮