பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்புடைமை

இ-ள்:- அன்பின் வழியது உயிர் நிலை - அன்பின் வழியதாகிய அறத்தினால் உயிருக்கு நிலைபேறு உளதாம்; அஃது இலார்க்கு, என்பு தோல் போர்த்த உடம்பு - அன்பு இலாதார்க்கு என்பின் மேல் தோலினால் போர்த்தப்பட்ட உடம்புகளே (உளவாம்). [ஏகாரம் கெட்டது.]

இஃது, அன்பில்லார் வீடு பெறா ரென்றது. ௭௪.

ன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

இ-ள்:- அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் எல்லாப் பொருள்களையும் தமக்கு உரிமையாக வுடையர்; அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் (பொருளேயன்றி) எலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்.

இஃது, அன்புடையா ரல்லது மற்றையோர் அறம்செய்தல் அரிதென்றது. ௭௫.

ன்போ டியைந்த வழக்கென்ப, ஆருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.

இ-ள்:- உயிர்க்கு ஆர் என்போடு இயைந்த தொடர்பு - உயிர்க்கு (இப்பிறப்பின் கண்) பெறுதற்கரிய மனித உடம்போடு பொருந்திய (இடைவிடாத) நட்பு, அனபோடு இயைந்த வழக்கு என்ப - (முன்பிறப்பின்கண்) அன்போடு பொருந்திச் சென்ற- செலவின் பயனென்று சொல்லுவர் (ஆன்றோர்).

இது, மானிடப்பிறப்பை எய்தியதற்குக் காரணமே அன்பென்றது. ௭௬.

ன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றார் எய்தல் சிறப்பு.

௨௯