இல்லற வியல்
னும், ஞாலத்தின் மாணப் பெரிது - உலகத்தினும் மிகப்பெரிதாம். [காலத்தினால் என்பது வேற்றுமை மயக்கம்.]
இஃது, உதவிவேண்டும் காலத்தில் செய்த உதவி மிகப்பெரி தென்றது. ௧0௫.
தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
இ-ள்:- தினைத்துணை நன்றி செயினும் - தினையளவு நன்றி செய்தாராயினும், பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் - (அதனை அவ்வளவிற்றென்று நினையாது) பனையின் அளவினதாகக் கொள்வர் (உதவியின்) பயனை அறிவார்.
[தினையளவு, பனையளவு என்பன முறையே சிறிய அளவையும் பெரிய அளவையும் குறித்து நின்றன.]
செயல்வகையால் சிறிதாயினும், நன்றி பயன்வகையால் பெரிதா மென்றது இது. ௧0௬.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர், தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
இ-ள்:- தம் கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம் கண் (உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை, எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - (அப்பிறப்பிலே யன்றி) எழுமையிலும் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் (சான்றோர்).
[எழுமை - ஏழ்முறை. எழு என்றும் வினைத்தொகை இங்கு எதிர்காலத்தைக் குறித்து நின்றது.]
இது, தமக்கு நன்றி செய்தார் நட்பினை எஞ்ஞான்றும் மறக்க லாகா தென்றது. ௧0௭.
உதவி வரைத்தன் றுதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
௪0