பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- ஒறுத்தாரை ஒன்றாக வையார் - (தமக்குத் துன்பம் செய்தாரை மாறாக) ஒறுத்தாரை ஒரு பொருளாக மதித்து வையார், பொறுத்தாரை பொன்போல் பொதிந்து வைப்பர் - பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தல்போலப் போற்றிவைப்பர் (உலகத்தார்).

[ஏகாரம் அசை. ஒறுத்தல் - தண்டித்தல். பொதிந்து வைத்தல் - மறைத்து வைத்தல் - போற்றி வைத்தல்,]

இது, மிகை செய்தாரைப் பொறுத்தோரை உலகத்தார் பெரியோராகப் போற்றுவ ரென்றது. ௧௨௭.

றுத்தார்க் கொருநாளே இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் தனையும் புகழ்.

இ-ள்:- ஒறுத்தார்க்கு ஒரு நாளே இன்பம் - (மிகை செய்தாரை) ஒறுத்தவர்க்கு (ஒறுத்த அற்றை) ஒரு நாளே இன்பம் (உண்டாம்); பொறுத்தார்க்கு பொன்றும் தனையும் புகழ் - பொறுத்தவர்க்குச் சாம் அளவும் புகழ் (உண்டாம்).

இது, மிகை செய்தாரைப் பொறுத்தார்க்கு இன்பமும் புகழும் உண்டா மென்றது. ௧௨௮.

ண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

இ-ள்:- உண்ணாது நோற்பார் பெரியர் - உண்ணாது நோற்பார் எல்லாரினும் பெரியர்; பிறர்சொல்லும் இன்னாத சொல் நோற்பாரின் பின் - பிறர் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின்பின்

இசு, பிறர் சொல்லும் தீச்சொற்களைப் பொறுப்பவர் தவம் பண்ணுவாரினும் பெரிய ரென்றது. ௧௨௯.

துறந்தாரின் தூய்மை யுடையார், இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்,

௪௮