பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறனில் விழையாமை

பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

இ-ள்:- பிறன் மனை நோக்காத பேராண்மை - பிறனது மனையாளைப் பாராத பெரிய ஆண்மைதானே, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு-சான்றோர்க்கு அறனும் ஆன்ற ஒழுக்கமுமாம்.

[ஒன்றே என்பது எண்ணுப்பொருளில் வந்தது.]

இது, பிறன்மனை நோக்காமை அறனும் ஒழுக்கமுமா மென்றது. ௧௪௮.

லக்குரியார் யாரெனின், நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோடோயா தார்.

இ-ள்:- நாம நீர் வைப்பில் - அச்சத்தைத் தருகின்ற நீர் சூழ்ந்த உலகத்தில், நலக்கு உரியார் யார் எனின் - நலத்துக்கு உரியார் யார் எனில், பிறற்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டா தார்.

நலக்குரியார் - விரும்புதற்குரியார். [நலத்துக்கு என்பது நலக்கு எனக் குறைந்து நின்றது.]

இது, பிறனில் விழையார் யாவராலும் விரும்பப்படுவ ரென்றது. ௧௪௯.

றன்வரையான் அல்ல செயினும், பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று.

இ-ள்:- அறன் வரையான் அல்ல செயினும் - அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - பிறன் இடத்தாளானவளது பெண்மையை விரும்பாமை நன்று.

[வரையாமை - உரித்தாகச் செய்யாமை. அல்ல - அறன் அல்லாதவை - மறங்கள்.]

௫௫