பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெகுளாமை.

ணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

இ-ள்:- இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்-தொடர்வுபட்ட நெருப்பு: மேன்மேலும் வந்துறுதல்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகால் செய்யினும், புணரின் வெகுளாமை நன்று-கூடுமாயின் வெகுளாதொழில் நன்று.

மேல் வலியவன் பொறுக்க வேண்டும் என்றவர், அவன் பொறுக்குங்கால் (பொறுக்கப் படுவோர்) தீமைசெய்யினும் பொறுக்க வேண்டு மென்றார். ௧௫௩.

செல்லா இடத்தும் சினம் தீது; செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

இ-ள்:- செல்லா இடத்தும் சினம் தீது - இயலாத இடத்தும் சினம் தீது; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - இயலுமிடத்தினும் அதனின் தீதாயிருப்பன பிற இல்லை.

[செல்லாத என்பது ஈறு கெட்டு நின்றது.]

இது, செல்லிடத்தும் செல்லாத இடத்தும் சினம் தனக்குத் தீமையை விளைக்கும் என்றது. ௧௫௪.

ன்னைத்தான் காக்கச் சினங்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

இ-ள்:- தன்னைத்தான் காக்க சினம் காக்க - ஒருவன் தன்னைத்தான் காக்க வேண்டுவனாயின் சினம் தோற்றாமற் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின் சினம் தன்னையே கொல்லும்.

இது, சினத்தால் தனக்கு உயிர்க்கேடு வருமென்றது. ௧௫௫.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

௫௭

8