பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி-சினம் என்று சொல்லப்படும் நெருப்பு, ஏமம் இனம் என்னும் புணையைச் சுடும்-தான் துன்பக் கடலில் அழுந்தாமல் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி-நெருப்பு; இது காரணக்குறி. [நூற்றுவரைக் கொல்லி என்பது போல]

இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது. ௧௫௬.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு,
நிலத்தெறிந்தான் கைபிழையா தற்று.

இ-ள்:- சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு-சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்து எறிந்தான் கைபிழையாதது அற்று.-நிலத்து எறிந்தவன் கை தப்பாமல் படுவது போலும்.

[எறிதல்-அடித்தல். பிழையாதது என்பது குறைந்து நின்றது.]

இது சினத்தால் தனக்குப் பொருட்கேடு வருமென்றது. ௧௫௭.

கையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உ.ளவோ பிற.

இ-ள்:- நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்-நகுதலையும் மகிழ்தலையும் கெடுக்கும் சினத்தைப் போல, பகையும் பிற உ.ளவோ-பகையா யிருப்பன வேறு சில உளவோ?

இது, சினத்தால் தனக்கு இன்பக்கேடு வரு மென்றது. ௧௫௮.

ள்ளிய வெல்லாம் உடனெய்தும், உள்ளத்தான்
உள்ளான் வெகுளி எனின்.

இ-ள்:- உள்ளத்தான் வெகுளி உள்ளான் எனின்-தன் நெஞ்சினால் வெகுளியை நினையானாகில், உள்ளிய எல்லாம் உடன் எய்தும்-தான் நினைத்தன எல்லாம் ஒரே காலத்துக் கூடப்பெறும்.

௫௮