இன்னா செய்யாமை
இது, சினத்தை விடுதல் நினைத்தவற்றையெல்லாம் எய்துவிக்கு மென்றது. ௧௫௯.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்;
துறந்தார் துறந்தார் துணை.
இ-ள்:- சினத்தை இறந்தார் இறந்தார் அனையர்-சினத்தை மிகுத்தார் செத்தாரோ டொப்பர்; துறந்தார் துறந்தார் துணை-அதனை ஒழிந்தார் (எல்லாப் பொருளையும்) துறந்தாரோ டொப்பர்.
இது வெகுளாதார் பெரியரென்றது. ௧௬0.
௧௭-வது-இன்னா செய்யாமை.
இன்னா செய்யாமையாவது, தமக்கு இன்னாதவாகத் தோன்றுமவற்றைப் பிறர்க்குச் செய்யாமை. இது வெருட்சி பிறந்து நிகழ்வதொன்றாதலின், வெகுளாமையின் பின் கூறப் பட்டது.
[இன்னாத - துன்பம் தரும் செயல்கள்.]
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்,
இ-ள்:- தான் இன்னா என உணர்ந்தவை-தான் இன்னாதன (இவை) என்று அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும்-பிறனுக்குச் செய்தலை மேவாமை வேண்டும்,
இஃது, இன்னா செய்யாமை வேண்டு மென்றது. ௧௬௧.
கறுத்தின்னா செய்தவற் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
இ-ள்:- கறுத்து இன்னா செய்தவன் கண்ணும் - (தாம் செய்த குற்றத்தினாலே) வெகுண்டு இன்னாதவற்றை (த்தமக்குச்) செய்தவன் மாட்டும், மறுத்து இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள்- (தாம் அதற்கு) மாறாகப் பின்பு இன்னாத செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
௫௬