பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னா செய்யாமை

இது, சினத்தை விடுதல் நினைத்தவற்றையெல்லாம் எய்துவிக்கு மென்றது. ௧௫௯.

றந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்;
துறந்தார் துறந்தார் துணை.

இ-ள்:- சினத்தை இறந்தார் இறந்தார் அனையர்-சினத்தை மிகுத்தார் செத்தாரோ டொப்பர்; துறந்தார் துறந்தார் துணை-அதனை ஒழிந்தார் (எல்லாப் பொருளையும்) துறந்தாரோ டொப்பர்.

இது வெகுளாதார் பெரியரென்றது. ௧௬0.

௧௭-வது-இன்னா செய்யாமை.

இன்னா செய்யாமையாவது, தமக்கு இன்னாதவாகத் தோன்றுமவற்றைப் பிறர்க்குச் செய்யாமை. இது வெருட்சி பிறந்து நிகழ்வதொன்றாதலின், வெகுளாமையின் பின் கூறப் பட்டது.

[இன்னாத - துன்பம் தரும் செயல்கள்.]

ன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்,

இ-ள்:- தான் இன்னா என உணர்ந்தவை-தான் இன்னாதன (இவை) என்று அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும்-பிறனுக்குச் செய்தலை மேவாமை வேண்டும்,

இஃது, இன்னா செய்யாமை வேண்டு மென்றது. ௧௬௧.

றுத்தின்னா செய்தவற் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

இ-ள்:- கறுத்து இன்னா செய்தவன் கண்ணும் - (தாம் செய்த குற்றத்தினாலே) வெகுண்டு இன்னாதவற்றை (த்தமக்குச்) செய்தவன் மாட்டும், மறுத்து இன்னா

செய்யாமை மாசு அற்றார் கோள்- (தாம் அதற்கு) மாறாகப் பின்பு இன்னாத செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

௫௬