பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

[அறவினை என்றதனால், பிறவினை தீவினையென்று கொள்ளப்பட்டது. பிறவினையும் என்பது உம்மை கெட்டுநின்றது. பிறவினை என்பது ஆகுபெயர், அதன் பயனுக்காயினமையால்,]

இஃது, அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது. ௧௭௪.

நிலைஅஞ்சி நீத்தாரு ளெல்லாம், கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

இ-ள்:- நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - (மனைவாழ்க்கையில்) நிற்றலை அஞ்சித் துறந்தவ ரெல்லாரினும், கொலை அஞ்சி கொல்லாமை சூழ்வான் தலை-கொலையை அஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பவன் (இல்வாழ்க்கையில் நிற்பினும்) தலைமை யுடையவன்.

இது, கொல்லாமை துறவினும் நன்றென்றது. ௧௭௫.

குத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை.

இ-ள்:- பல் உயிர் பகுத்து உண்டு ஓம்புதல்-பல உயிர்களுக்குப் பகுத்துண்டு (அவற்றைப்) பாதுகாத்தல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை-நூலுடையார் திரட்டின அறங்க ளெல்லாவற்றிலும் தலையான அறம்,

[பகுத்து உண்டல்-தன் உணவைப் பல உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துத் தான் உண்டல்.]

இது, கொல்லாமை எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது. ௧௭௬.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணும் கூற்று,

இ-ள்:- கொல்லாமை மேற் கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்-கொல்லாமையை மேலான விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிர் உண்ணும் கூற்று செல்லாது-உயிரை உண்ணும் கூற்றுச் செல்லாது.

௬௪