பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- அருள் அல்லது யாது எனின்-அருளல்லது யாதெனில், கொல்லாமை கோறல்-கொல்லாமையைச் சிதைத்தல் (என்க); பொருள் அல்லது அவ்வூன் தினல்-பொருளல்லது (யாதெனில்) அவ்வூனைத் தின்னல் (என்க).

[பொருளல்லது-பயனில்லாதது, கொல்லாமையைச் சிதைத்தல்-கொலையைச் செய்தல்.]

புலால் உண்பதனால் அருள் கெடுதலே யன்றிப் பெறுவதொரு பயனும் இல்லையென்று இது கூறிற்று. ௧௮௬.

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரிற் றலைப்பிரிந்த ஊன்.

இ-ள்:- செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்-குற்றத்தினின்றும் நீங்கின தெளிவையுடையார் உண்ணார், உயிரின் தலைப் பிரிந்த ஊன்-உயிரினின்றும் நீங்கின உடம்பை.

இம் மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், புலாலைத் தெளிவுடையோர் உண்ணா ரென்றது. ௧௮௭.

விசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றின்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

இ-ள்:- அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்-நெய்யைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று-ஒன்றின் உயிரை நீக்கி அதன் உடம்பை உண்ணாமை நன்று.

இது, புலாலுண்ணாமை எல்லாப் புண்ணியங்களிலும் நன்றென்றது. ௧௮௮.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

௬௮