பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

ல்லா றெனினும் கொளல்தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

இ-ள்:- நல் ஆறு எனினும் கொளல் தீது-(ஒருவன் மாட்டுக் கொள்ளல்) நன்மை பயக்கும் நெறியெனினும் கொள்ளல் தீது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - (ஒருவருக்குக் கொடுத்தால்) பாவம் உண்டெனினும் கொடுத்தல் நன்று.

கொள்வோர் அமைதியை அறிந்து கொடுக்க வேண்டுமேனும், இது வரையா வித்தையா தலால் யாதொற்றானும் கொடை நன்றென்பது கூறிற்று. ௨௨௧.

றியார்க்கொன் றீவதே யீகை;மற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இ-ள்:- ஈகை வறியார்க்கு ஒன்று ஈவதே-ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து-(இஃது) ஒழிந்த கொடையெல்லாம் குறிஎதிர்ப்பை கொடுத்த நீர்மையாதலை யுடைத்து.

[குறிஎதிர்ப்பை-குறித்த எதிர்ப்பை, எதிர்ப்பை - எதிர் கொடுப்பது - கைம்மாறு.]

இது, கொடுக்குங்கால் இல்லாதார்க்குக் கொடுக்க வேண்டு மென்றது. ௨௨௨.

லனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்,
குலனுடையான் கண்ணே யுள.

இ-ள்:- இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்-(இரந்து வந்தாற்கு) இல்லையென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும், குலன் உடையான் கண்ணே உள-குடிப்பிறந்தார் மாட்டே யுளதாம்.

[ஈதல் என்றும் ஒருமைப் பெயர் உள என்னும் பன்மை வினையோடு பொருந்தி நின்றது.]

இது, கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டு மென்றது. ௨௨௩.

௮0