இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவள்ளுவர்
திருக்குறள்.
மணக்குடவருரை.
அறத்துப்பால்.
பாயிரம்.
[பாயிரமாவது, நூன்முகம்.]
முதலாவது.--கடவுள் வாழ்த்து,
[கடவுள் வாழ்த்தாவது, கடவுளை வாழ்த்தும் வாழ்த்து.)
அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.
இதன் பொருள்:- எழுத்தெல்லாம் அகரம் முதல - எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; (அவ்வண்ணமே), உலகு ஆதிபகவன் முதற்று - உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து,
உலககாரணன் ஆதிபகவ னென்றார். ௧
கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?