பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- உரைப்பார் உரைப்பவை எல்லாம்-சொல்லுவார் சொல்லுவன எல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்-இரந்து வந்தார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பார் மேல் நில்லாநின்ற புகழையே.

இஃது, ஈகையே புகழுக்குச் சிறந்த காரண மென்றது. ௨௩௩.

ன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

இ-ள்:- உயர்ந்த புகழ் அல்லால்-உயர்ந்த புகழல்லது, உலகத்து ஒன்றாக-உலகத்து இணையின்றாக, பொன்றாது நிற்பது ஒன்று இல்-கெடாது நிற்பது பிறிது இல்லை. .

இது, புகழ் மற்றுள்ள பொருள் போலன்றி அழியாது நிற்கு மென்றது. ௨௩௪.

நிலவரை நீள்புகழ் ஆற்றின், புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

இ-ள்:- நிலவரை நீள்புகழ் ஆற்றின்-நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வானாயின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது-தேவருலகம் புலவரைப் போற்றாது (இவனைப் போற்றும்),

புலவரென்றார் தேவரை, அவர் புலனுடைய ராதலான்.

இது, புகழ்செய்தாரைத் தேவருலகம் போற்று மென்றது. ௨௩௫.

புகழ்பட வாழாதார், தம்நோவார், தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

இ-ள்:- புகழ்பட வாழாதார்-புகழ்பட வாழமாட்டாதார்,

௮௪