பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனியவை கூறல்

கனமர்ந் தீதலின் நன்றே, முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.

இ-ள்:- அகன் அமர்ந்து ஈதலின் நன்று-மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று; முகன் அமர்ந்து இன்சொலன் ஆக பெறின்-முகம் பொருந்தி இன்சொல் சொல்லவல்லவ னாயின்.

[ஏகாரம் அசை.]

இஃது, இனிய பார்வையோடு இன்சொல் கூறுதல் அன்போடு ஈதலினும் சிறந்த தென்றது. ௨௫௧.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி, அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

இ-ள்:- முகத்தான் அமர்ந்து-கண்ணாலே பொருந்தி, இனிது நோக்கி- இனிதாக நோக்கி, அகத்தான் ஆம் இன்சொலினதே-மனத்தோடே பொருந்திய இன்சொல்லையுடையதே, அறம்-அறமாம்.

இஃது, இனிய பார்வையையும் இனிய சொல்லையு முடையதே அறமா மென்றது. ௨௫௨.

ல்லவை தேய அறம்பெருகும், நல்லவை
நாடி இனிய சொலின்.

இ-ள்:- நல்லவை நாடி இனிய சொலின்-நல்லவான சொற்களை ஆராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின், அல்லவை தேய அறம் பெருகும்- அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

இது, நல்ல பொருள்களை இன்சொற்களால் சொல்லின் மறம் கெடுமெனவும் அறம் வளருமெனவும் கூறிற்று. ௨௫௩.

ணிவுடையன் இன்சொல்ல னாதல், ஒருவற்
கணி;அல்ல மற்றுப் பிற.

௯௧