பக்கம்:திருவாசகத்தேன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தன்மையுடன் வாழ்தல் வேண்டும். இறைவனிடம் பிறந்து மொழி பயின்ற நான் தொடங்கி இடையீடின்றித். தொடர்ந்து பத்திமை செலுத்த வேண்டும். பெருமிதமும் வீரமும் செறிந்த அடிமைப் பண்பு வேண்டும்! அன்பிலும் அன்பின் திட்பத்திலும் அன்பின் ஆற்றலிலும் நம்பிக்கை, வேண்டும். அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை' என்று வாழ்தல் வேண்டும். அச்சம் அன்புக்குப் பகை, உறவுக்கு. எதிரி, அச்சம் பத்திமைக்கு எதிரிடையானது. அச்சம் தவிர்த்தவர்களே அடியார்கள்! பழ அடியார்கள்! மாணிக்கவாசகருக்கு அச்சமில்லை! "எங்கு எழில் என் ஞாயிறு" என்றார். ஞாயிறு திரியும் திசை மாறினால் துன்பம் வரும். அத்துன்பமும் தன்னைத் தீண்டாது! இது மாணிக்கவாசகரின் திட்டம் உறுதி மாணிக்கவாசகர் அச்சமின்றி வாழ்ந்தார். மாணிக்கவாசகர் "அச்சம் தவிர்த் தாண்ட" சேவனாகிய திருப்பெருந்துறையுறை சிவனுக்கு உடைமையானார். உலகியல் வாழ்க்கையில் உடைமை மிகுதியும் பேணப்படுகிறது. உடைமைக்கு உள்ள மதிப்பு மனிதனுக்குக்கூட இல்லை. காரணம் உடைமை. வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. அருளியல் வாழ்க்கை யிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் உடைமையாதலுக்கு. மதிப்பு உண்டு. பங்கமில்லாத உரிமைக்கு உடைமையாதல் அவசியம். அதாவது நம்முடைய தோழனுக்கு நாம், உடைமையாதல், நட்பியல் வாழ்க்கையில் உடைமையான வழி உறவுகள் வளரும்; உரிமைகள் அமையும். நல்ல. பாதுகாப்புக் கிடைக்கும்; இருபாலும் கிடைக்கும். ஆன்மிக வாழ்க்கையில் இறைவனுக்கு நாம் உடைமையாகிவிட்டால் அவன் நம்மை வளர்ப்பான்; காப்பான்: நாம் கவலையின்றி வாழலாம்! நாம் உலக உடைமை. களுக்கும் உரிமைக்காரராக விளங்கும் வரையில் இறைவனுக்கு உடைமைக்காரராதல் அரிது. கடவுளுக்கும் சைத்தானுக்கும் ஒரே நேரத்தில் தொண்டு செய்ய முடியாது, இரண்டு எஜமானருக்கு ஒரே நேரத்தில் சேவை