இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருச்சதகம் * 97
- பழித்திலேன் உன்னை என்னை
- ஆளுடைப் பாதம் போற்றி
- பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
- பெரியவர் கடமை போற்றி
- ஒழித்திடு இவ்வாழ்வு போற்றி
- உம்பர் நாட்டு எம்பிரானே 66
- உம்பர் நாட்டு எம்பிரானே
- பழித்திலேன் உன்னை என்னை
'உம்பர்நாடு-வீட்டுலகம்.
தம்முடைய இப்போதைய நிலையைக் கண்டு, தாமே தம்மை வெறுத்துக்கொள்வதாகக் கூறுகிறார் அடிகளார். இறையனுபவம் தம்மைவிட்டு நீங்கியமைக்குத் தாமே காரணம் என்ற குற்ற உணர்வு மேலிட, இப்பொழுது இறைவனை நோக்கிச் சாலப் பெரியவனாகிய அவன் சிறியவர்கள் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அவ்வாறு பொறுப்பது பெரியவன் ஆகிய அவனுக்குக் கடமை என்றும் நினைவூட்டுகிறார்,
இந்தக் குற்ற உணர்வு அவரிடம் ஆழப் படிந்திருந்தது என்பதைத் திருவாசகத்தின் பல இடங்களிலும் காணலாம். 'பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே' (திருவாச: 110) என்றும் 'வெறுப்பனவே செய்யும் என் - சிறுமையை நின் பெருமையினாற் பொறுப்பவனே' (திருவாச: 409) என்றும் கூறியுள்ளமை இக்கருத்தை வலுப்படுத்தும்.
71.எம்பிரான் போற்றி வானத்தவர்
- அவர் ஏறு போற்றி
- கொம்பர் ஆர் மருங்குல் மங்கை
- கூறவெள் நீற போற்றி
- செம் பிரான் போற்றி தில்லைத்
- திருச்சிற்றம்பலவ போற்றி
- உம்பராய் போற்றி என்னை .
- ஆளுடை. ஒருவ போற்றி 67
- ஆளுடை. ஒருவ போற்றி