152 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2
‘ஐயனே! வலிவு பொருந்திய என் வினைகள் ஆகிய காட்டை மேலும் வளராதபடி மடக்கி வேரோடும் எரியூட்டும் ஆண்மை பொருந்தியவனே! தயைகூர்ந்து என்னை விட்டுவிடவேண்டா என்றவாறு.
'கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே’ என்ற தொடர் இறைவன் கயாசுரனை அழித்த வரலாற்றை உட்கொண்டதாகும்.
காட்டைப் பல வகையில் அழிக்கலாம். வளரவிடாமல் நுனிப்பகுதியை வெட்டிக்கொண்டே இருக்கலாம். அடி மரத்தோடு வெட்டிச் சாய்க்கலாம். இந்த இரு முறையிலும் காடு அந்நேரத்திற்கு அழிக்கப்படும். ஆனால், வேர் வலுவாக இருக்கின்றவரை மறுபடியும் அம்மரம் துளிர்ப்பதைத் தடுக்கமுடியாது. அதேபோல வினையை அனுபவித்துத் தீர்த்துவிடலாம் என்றால், அது நடவாத காரியம். பிராரத்துவத்தை அனுபவிக்கும்பொழுதே அது ஆகாமியமாக மாறி, இறப்பு வரும்போது அதுவே சஞ்சிதமாக மாறிவிடும். இந்த வினைச் சுழற்சியிலிருந்து விடுபடுதல் இயலாத காரியம். எனவேதான், அடிகளார் வல்வினை ஆகிய காட்டை தீவைத்துக் கொளுத்தி அடியோடு அழிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
பருப்பொருளாக உள்ள காட்டை அழிக்க, பருப்பொருளாகிய தீ தேவைப்படுவதுபோல, நுண்மையான வினைக்காட்டை அழிக்க மிக நுண்மையான இறைவன் அருள் என்ற தீ தேவைப்படுகிறது.
124.
கொம்பர் இல்லாக் கொடிபோல்
அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்
விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே