பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 153


அம்பரமே நிலனே அனல் காலொடு

அப்பு ஆனவனே
20

அலமந்தனன்-கலங்கினேன். கோமளம்-அழகு. உம்பருள்ளாய் மேலான இடத்துள்ளவனே. விண்ணவர்-தேவர்கள்.

இறைவன் ஐம்பெரும்பூதங்களாகவும் உள்ளான் என்பதை 'அம்பரமே (ஆகாயம்) நிலனே அனல் (நெருப்பு) காலொடு (காற்று), அப்பு (நீர்) ஆனவனே’ என்கிறார்.

'கொழுகொம்பு ஒன்றைப் பற்றியே கொடி வளர முடியும். அதுபோல உன் திருவடியாகிய கொழுகொம்பைப் பற்றியே நான் வாழமுடியும். ஆதலால் என்னை விட்டுவிடாதே’ என்கிறார்.

125.

ஆனை வெம் போரில் குறும் தூறு
       எனப் புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய்
       வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும்
       அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற
        ஒண்மையனே

21

குறுந்துறு-சிறு புதர். கன்னல்-கருப்பஞ்சாறு. ஒண்மையன்-ஒளியையுடையவன்.

ஒவ்வொரு புலனும் மீதூர்ந்து பணிபுரிகையில், ஒரு யானை மற்ற யானைகளொடு போர்புரிவதையே அடிகளார் குறிக்கின்றார் என்று கொள்ளுதல் நலம். போர் புரிகின்ற யானை கீழேயுள்ள சிறு புதர்களை மிதிக்க வேண்டுமென்று விரும்பவோ கருதவோ இல்லை. யானை போர் புரிதலாகியத் தன் பணியைச் செய்ய, ஒரு பாவமும் அறியாத புதர் நசுக்கப்படுகிறது.