பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


பெற்றது-பிராரப்த கன்மத்தை நுகரும்பொருட்டு அளிக்கப் பெற்ற உடல். பிழை-ஆகாமிய வினைகள். உற்று-திருவடியைப் பொருந்தி. எனக்குள்ளவன்- என்னை உரிமையாகவுடையவன்.

இப்பாடலுக்கு வாலாயமாகப் பொருள் கூறுகின்றவர் கூற்றுச் சரியாகத் தோன்றவில்லை.

'உலகியலில் ஈடுபட்டுப் பிழையே பெருக்கினேன். இது பெருகப் பெருக, உன்மாட்டு உள்ள அன்பு சுருங்கி விட்டது.’

இந்த நிலையில் அடியேன் திருப் பெருந்துறையில் உன்னை அடைந்ததால் (உற்று) மிகுதியும் மனத் திண்மையோடு வீடுபேற்றை நோக்கிச் செல்வதற்குச் சித்தமாக இருந்தேன் (தேறி நின்றேன்).

'இப்பொழுது நீ என்னைவிட்டு நீங்கியமையின் என் மனம், சித்தம் முதலியவை மீட்டும் பிழையே பெருக்கத் தொடங்கியமையின் அன்பு சுருங்கலாயிற்று.'

‘திருப்பெருந்துறையில் முற்றடியானாக இருந்த யான், இப்பொழுது வெற்றடியானாக ஆகிவிட்டேன். எங்குத் தேடினும் என்னைத் தாங்குநர் இல்லை என்பதைக் கண்டுகொண்டேன். எனது வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் மூலதனமாக உள்ளவனே! (வாழ் முதலே!) என்னை விட்டுவிடாதே’ என்க.

128. உள்ளனவே நிற்க இல்லன செய்யும்
மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்
வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய்
புலன் நின்கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம்
தன்னை எறும்பு எனவே 
24