பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 181


145.

முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கை
      வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய்
      விடக்கு ஊன் மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன் சிவனே
       முறையோ முறையோ
திதலைச் செய் பூண் முலை மங்கை பங்கா
       என் சிவ கதியே 41

முதலைச் செவ்வாய்ச்சியர்-முதலைபோல கொண்டதை விடாது பற்றிநிற்கும் மகளிர். வேட்கை வெந்நீர்-காமநீர். வெம்-விருப்பம்; கொடுமை. கடிப்ப-இதுவும் அங்ஙனமே மனப்ப வெறுக்க என இருபொருள் தருதல் காண்க. விதலை-நடுக்கம். விடக்கு ஊன்-தசைத்திரள். சிதலை-நோய். காயம்-உடல். திதலை -தேமல்.

‘சிவந்த வாயினையுடைய மகளிராகிய முதலை கடிக்க, அவர்கள்மேல் கொண்ட வேட்கை என்னும் நீர்ச்சுழலில் அகப்பட்டு நடுங்குகின்றவனாகிய என்னை விட்டுவிடாதே' என்கிறார்.

146.

கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும்
      ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய்
      வெள் தலை முழையில்
பதி உடை வாள் அரப் பார்த்து இறை
      பைத்துச் சுருங்க அஞ்சி
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும்
       சடை மன்னவனே 42

ஊன்-உடல். வெண்டலை முழை-கபாலத்திலுள்ள ஓட்டைகள். பதியுடை வாளர-மறைந்திருக்கின்ற பெரும்பாம்பு. இறை பைத்து-படமெடுத்து.