பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் 49



32.கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்

கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்

நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே

நாயினுக்குத் தவிசு இட்டு நாயினேற்கே

காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்

கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை

மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்

எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே28


கேட்டு-வண்ணங்களைப் பிறர்சொல்லக் கேட்டு. அறியாதான்-முழுதும் உணரப்படாதவன். கிளை-கற்றம். கேளாதே கேட்டான்- பொறிகளாலுணராது என்றும் எல்லாம் உணர்பவன். தவிசு- ஆசனம்.

இத்திருப்பாடலிலும் திருப்பெருந்துறை நிகழ்ச்சியையே அடிகளார் நினைவுகூறுகின்றார். ‘நாட்டார்கள் விழித் திருப்ப’ என்றதால் தம்முடன் வந்தவர்களையும் திருப் பெருந்துறையில் கூடி நின்றவர்களையும் நினைக்கின்றார். அப்பெருங்கூட்டத்துள் தம்மைவிடப் பல்லாற்றானும் தகுதி உடையவர்கள் பலர் இருந்திருக்கலாமே? அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டுத் தம்மைமட்டும், அவர்கள் எதிரே ஆட்கொண்டார் என்று நினைந்தவுடன் குருவின் செயல், நாய்க்குத் தவிசிட்டது என்ற பழமொழியை நினைவூட்டியது.

நாய் போன்ற தம்மை ஆட்கொண்டதோடு மட்டும் இன்றிப் புறக் கண்களாலும், அகக் கண்களாலும் காண முடியாதவற்றை யெல்லாம் (அதாவது ஜோதி தரிசனத்தை) ஒரே விநாடியில் காணுமாறு செய்தான். கேளாதன எல்லாம் கேட்பித்து’ என்றதால் குருவானவர் வாய் திறந்து பேசாமல் மெளன. சம்பாஷணையின் மூலமே இதுவரை தாம் கேட்டிராத நாத தரிசனம் கிடைக்குமாறு செய்தார் என்று பாடுகிறார்.