பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை 7

தெய்வக் திருத்தொண்டைத் தலைமேற் கொண்டார் அத் திருத்தொண்டு நிறைவுறுமாறு நீண்ட வாழ்நாள் வாழ்வரென்பது உலகறியுண்மை. எனவே நம் பெரியாரவர்களும் எஞ்சிய திருமுறை கட்கும் ஒளிநெறி எழுதியுதவுமாறு நிறைநாள் நூற்றிருபதின் மேலும் விற்றிருப்பாரென்பது உறுதி. அத்தகைய பேற்றினே அம்மை அம்பலவாணன் அளித்தருள்வானாக.

இச்சீரிய நூலைச் சிறப்புற யாத்துத் தந்த நம் பெரியாரவர் கட்குக் கழகத்தார்தம் உளங்கனிந்த அன்பும் வணக்கமும் நன்றியும் என்றென்றும் உரியவாகுக.

இவ்வருள் நிறை ஒளிநெறி நூல்களைக் கழகவழி வெளியிடும் பேற்றை நல்கியருளிய அம்மை அம்பலவாணர் திருவடிப் போது கட்கு வணக்கஞ் செலுத்துகின்ருேம்.

இத் திருவாசக ஓளிநெறியினைச் செந்தமிழன்பர்களும் செந்நெறிச் செல்வர்களும் வாங்கி ஒதியும் ஒதுவித்தும்உறுபயன் பெறுவார்களாக.

சைவதித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார். அடுத்த பக்கம்