பொழிப்புரை - த கோவேந்தன் k 119
ஊட்டினாய் ஊட்டுவதற்காகக் கன்னத்தின் பக்கத்தில் வைப்பதை மாயக் குழவி குடிக்காமலிருப்பது கண்டு, தாயாக எண்ணிக் கொண்ட நீ அந்தக் குழவியின் கன்னத்தை அழுத்தி ஊட்டினாய் பின்னர் பணி நீரில் குளிப் பாட்டினாய்! தொட்டிவில் இட்டுத் தாலாட்டினாய்! இவ்வாறு விளையா
டும் அழகிய குழந்தையே இதழ் ஆகிய பவளத்தைக் குவித்து முத்தம் தருக! கோவைத் திருவே! புதுவையின் பொற்கொடியே ஆண்டாளே! முத்தம் தருக!
அரி எனச் சுருதிகற் றிடும் அமுத உரைநிற்க
ஆட்கன் தனது பெயரே
அறை என்னும் நச்சுரை புகாமல் இரு செவிபுதைத்து
அரி என்ன அரி என்ற பேர்க்கு
பன் எங்கு i? என்ன எங்கம் i என்மைன்
உருத்து அடித் திட்டது னத்து
உடன் உதித்து எற்றிய கரம்பற்றி உதரத்தை
உகிரின்வகிர் செய்து குடரே
தெரியலா கப்புனை நராரியன் அடங்காச் சினத்தழல் அடிக்குதற் காத் &
திசைமுகனும் இந்திரனும் அடிபணிந்து ஏவவே சென்று எதிர்ந்து அருளின்நோக்கிப்
பரிமளத்து இனிமைதோய் மழலைவாய் அமுத மொழி
பவளவாய் முத்தம் அருளே! -
பைந்துழாய் பெற்ற பெண் பிள்ளைமா னிக்கமே!
பவளவாய் முத்தம் அருளே! (55)
அரி என்று பரம் பொருள் பெயராகிய மறைகள் கற்கின்ற அமுதம் போன்ற சொல் இருக்கையில், இரணியன் ஆணவத்தால் என் பெயரை மட்டுமே சொல்! சொல்! என்று அதட்டிக் கூறிய நஞ்சு போன்ற சொல் தன் காதில் புகாதபடி காதைப் பொத்திக் கொண்டான் ஏகலாதன். தன் தந்தை இரணியன் சொல்லுக்கு மாறாக (அரி.அரி.அரி என்று பலகால் சொன்னான். அதனால் இரணியனுக்குச் சினம் பொங்கியது.அரி என்ற பெயர்க்கு உரியவன் எங்கே உள்ளான்? என்று வினவினான்.