பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் k 142

கெழுதகைப் பரமேட்டி முதலாய அப்பிராக் கிருதபூ தங்கள்ஐந் தால் -

கிளைவாசு தேவன்முதல் நால்வர்யின் பன்னிருவர்

கேசவா தியர்கள்ஆ னோன்

முழுதும் இன் புற்றுஉம்பர் எய்துதிரு வோலக்க

முத்தர்நித் தரின்முற்று வான் முற்றும்ஏழ் ஆவரன பேர்இல்லம் நினதாக முன்பு இழைத் ததுவும்.அல் லால், உழுவல்அன் புடைநினது லீலைக்கு உறுப்பதாய்

ஒருசிற்றில் உலகம்ஈ ரேழ் உடையபல கோடியகி ரண்டர் அண் டங்களை

உருப்பெற இழைத்த முதன் மைச்

செழுமலர்த் தடமருவு புதுவைப் பிராட்டிநீ

சிற்றிலை இழைத்தருள்க வே!

தென்னரங் கேசன்முதல் ஐவரும் குடிபுகச்

சிற்றிலை இழைத்தருள்க வே! (B5)

மிக்க பெருமையுடைய பரமேட்டி முதலிய இயற்கைத் தொடர் பில்லாத பூதங்கள் ஐந்து வீட்டுலகில் உண்டு அப் பூதங்களிலிருந்து கிளைத்தவர் வாசுதேவன், பிரத்தியும்னன், அநிருத்தன், சங்கர்ணன் ஆகிய நால்வர். இவர்கள் வியூக மூர்த்திகள் எனப்படுவர். அவர்கள் ஒவ்வொரு வரிலிருந்து மும் மூவராகப் பன்னிருவர் தோன்றினர், அவர்கள் கேசவன், நாரயணன், மாதவன், கோவிந்தன், விட்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், சீதரன், இருடிகேசன், பதுமநாபன், தாமோதரன் எனப்பெயர் பெறுவர்.

பரவாசுதேவன் ஒருவன், முர்த்திகள் நால்வராகவும் அவர்களி லிருந்து தோன்றிய பன்னிருவராகவும் பிரிந்து நின்று படைப்புத் தொழில் மேற்கொண்டான்.

அவன் மகிழ்ச்சியின் வடிவானவன் பொன்னுலக மாநகரில் உள்ள திருமாமணி மண்டபக் கொலுவில் ஏழ் மதில்களாகிய ஏழ் சுவர்கள் சூழ்ந்த பெறுவீடு நினக்குரியதாக முன்பு கட்டினாய்! அது மட்டுமா?

மிக்க அன்புடைய நின் திருவிளையாடளுக்கு அங்கமாக ஒரு சிறு வீடு ஆக, பதினான்கு உலகங்களையுடைய பலகோடிப் புற அண்டங்க