ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 148
சிறுசோறு சமைத்து அருளே தென்அரங்கேசன் முதல் ஆவரும் விருந்து உண்ணச் சிறுசோறு சமைத்து அருளே!
ஒண்தழல் குண்டத்துள் ஆகுதிக்கு உரியராம்
உத்தமர் தமக்குமறை யோர்
உபநிடதம் உட்கொண்ட மந்திரம் தந்திரம்
உலோயாமல் உய்ப்பதனை யே
மண்டு.அழல் கடவுள்கைக் கொண்டடிைவில் மாதவன்
மலர்க்கரத்து உய்ப்பமா யோன் வாய்வைத்த ஆகுதிகள் நான்வகைத் தோற்றத்தின்
வாழ்வுறு சராசரம் எலாம்
அண்டர்அண் டங்களுக்கு அப்புறத்து அப்புறத்
தாம்அனைத் தையும்.ஊட்டு மால், அவனை ஊட்டும்.இச் சேடம்உன் பான்மகிழ்ந்து
அயனைமுத லவர்கள் நின் றார்,
திண்டிமப் புலமைமறை யவர்.பிரான் அருள்புதல்வி
சிறுசோறு இழைத்தருள்கவே!
தென்னரங் கேசன்முதல் ஐவரும் விருந்துணச்
சிறுசோறு இழைத் தருள்கவே! (gfj
ஒள்ளிய தழல்எரியும் வேள்விக் குண்டத்துள் அவிசு ஆகுதிக்கு உரியர் ஆகிய தேவர்க்கு அந்தணர்கள், உபநிடதம் துட்பமாகக் கூறும் மந்திர, தந்திரங்கள் சற்றும் வழுவாதபடி ஆகுதி சொரிவர். அந்த ஆகு தியை மண்டுகின்ற தீக் கடவுள் கைக் கொண்டு முறைப்படி திருமாலின் மலர்க்கையில் சேர்ப்பான்.
அந்த ஆகுதியைத் திருமால் ஏற்று உண்பான். அதனைக் கருப்பை, முட்டை, நிலம், வியர்வை ஆகிய நால்வகையாகப் பிறந்து வாழ்கின்ற அசையும் பொருள் அசையாப் பொருள்கள் அனைத்தினுடன் தேவர்களுக்கும் அண்டர் வாழும், அண்டங்களுக்கு அப்புறத்துக்கும் அப்புறத்து வாழும் அனைத்துக்கும் ஊட்டுவான்.
அத்தகைய மாயோனுக்குநீஊட்டிய பின் எஞ்சியதை உண்பதற்காக மகிழ்ச்சியுடன், நான்முகன் முதலியவர்கள் காத்துள்ளனர்; தமக்குநிகர் யாரும் இலர் என்று காட்டுவதற்காக மிக்க புவமையாளர்கள் திண்டிமம் என்னும் பறையை முழக்குவித்துக் கொண்டு பல்லக்கில் செல்வர்.