பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் அருட்புகழ்

தனதான் தத்த தந்த தனதான்

பரிவால்உ யிர்க்கி ரங்கி அவதாரம் உற்று நொந்து - பலகால்உ ழைத்தும் இந்த உலகோர் தாம்

பகவான்.எ னைத்தெ எரிந்தென் நெறியேயி டித்தெ ழுந்து பதமேபெறற்கு முந்தி முயலாரேல்

எளிவாய் அ ளற்ற முந்தி ஒழிவார் எ ணக்க னன்றோர் இகலால் வெறுத்த அந்த இறையோன் முன்

இறைநீகை விட்ட அந்த உயிராம் என் மக்கள் தங்கள் இதம் நாடி இக்க ணம்தொல் புவிமீதே திருஆதரித்தி லங்கு புதுவாபு ரிக்கண் அங்கொர் திருவாய்உ திப்பென் என்று பெரியாழ்வார்

திருமாளிகைகக்கண் அன்பு வடிவாகி உற்றெ ழுந்து செகமேக ளிக்க இன்ப இசையாலே

தருபாகி னிற்க லந்த அமுதாய்இ னித்தி லங்கு * தமிழ்மாலை யைச்சு ருண்ட குழல்சூடும்

தளிர்மாலை யைப்பு னைந்து

நெடுமாலி னுக்கு வந்து தருகோதை பொற்ப தங்கள் பணிவோமே!

-அருட்கவி அரங்க சீனிவாசன்